sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடும்ப பிரச்னையில் மருமகன் தாக்கி மாமனார் பலி: போலீசார் விசாரணை

/

குடும்ப பிரச்னையில் மருமகன் தாக்கி மாமனார் பலி: போலீசார் விசாரணை

குடும்ப பிரச்னையில் மருமகன் தாக்கி மாமனார் பலி: போலீசார் விசாரணை

குடும்ப பிரச்னையில் மருமகன் தாக்கி மாமனார் பலி: போலீசார் விசாரணை


ADDED : ஆக 03, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், குடும்ப பிரச்னையில், மருமகன் தாக்கியதில், மாமனார் உயிரிழந்த சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் மதுரைவீரன், 58. வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் சுகந்தி. இவருக்கும், நாமக்கல் எஸ்.பி.எம்., காம்பவுண்டு பகுதியை சேர்ந்த தியாகு, 35, என்பவருக்கும், 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

தற்போது, தம்பதியருக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று, தியாகு மற்றும் அவரது மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகந்தி, தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு மதுரைவீரன் வந்துள்ளார்.

பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மருமகன் தியாகு மற்றும் மாமனார் மதுரைவீரன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகு, குச்சியால் மதுரை வீரனை தாக்க முயன்றார். அப்போது, மதுரைவீரன் குச்சியை பிடித்துள்ளார். அந்த குச்சியை நெஞ்சில் வைத்து தியாகு அழுத்தியுள்ளார். அப்போது, மதுரைவீரன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us