/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'முட்டு' பிரித்த சிறுவன் கான்ட்ராக்டர் மீது புகார்
/
'முட்டு' பிரித்த சிறுவன் கான்ட்ராக்டர் மீது புகார்
'முட்டு' பிரித்த சிறுவன் கான்ட்ராக்டர் மீது புகார்
'முட்டு' பிரித்த சிறுவன் கான்ட்ராக்டர் மீது புகார்
ADDED : ஆக 06, 2024 02:31 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி கடைவீதியில் இருந்து, கிருஷ்ணன் தெருவுக்கு செல்லும் வழியில் சாக்கடை பாலம் கட்டப்பட்டுள்ளது. சில நாட்களாக பெய்த மழை காரணமாக, இப்பகுதியில் சாக்கடையுடன் மழைநீர் சேர்ந்து குட்டைபோல் தேங்கி நின்றது. இந்நிலையில், நேற்று காலை கட்டட தொழிலாளர்கள் கால்வாய் உள்ளே இறங்கி கான்கிரீட்டுக்கு போட்ட முட்டை பிரிக்க முயன்றனர். ஆனால், மழைநீருடன் சாக்கடை நீர் தேங்கி நின்றதால், அவர்களால் உள்ளே இறங்க முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து முட்டு மரத்தை பிரித்துள்ளனர். சிறுவன் கால்வாயில் இறங்கி முட்டை எடுக்கும் வீடியே, சமூக வலைதளங்களில் பரவியது. சிறுவனை வைத்து வேலை வாங்குவதாக எழுந்த புகாரையடுத்து, நகராட்சி சார்பில், நேற்று ராசிபுரம் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.