ADDED : ஜூன் 30, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் உள்பட மூவர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம், ஆனங்கூர் சாலை, காந்தி தெருவில் வசிப்பவர் திலகவதி, 44. இவர், நேற்று முன்தினம் மாலை, 2:45 மணியளவில் காந்தி தெரு நுழைவுப்பகுதியில், 'ஆக்டிவா' டூவீலரில் நின்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் வேகமாக வந்த, 'பஜாஜ் டிஸ்கவர்' பைக் மோதியதில், திலகவதி, விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீதர், 24, இவரது வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து வந்த சரோன் ராஜ், 25, மூவரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த திலகவதி மற்றும் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.