/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மஞ்சள் பை மிஷின்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மஞ்சள் பை மிஷின்
ADDED : ஆக 18, 2024 04:09 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், மாசுக்-கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில், தானியங்கி மஞ்சள் பை இயந்திரம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த இயந்திரத்தில், இரண்டு ஐந்து ரூபாய் காசுகள் அல்லது ஒரு பத்து ரூபாய் காசு போட்டால் ஒரு மஞ்சள் பை வரும். அதனை எடுத்து மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தெரிவித்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் காசுகளை போட்டு பைகளை எடுத்துச்சென்றனர். செயல் அலு-வலர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், திருச்செங்கோடு நகர, தி.மு.க., செயலாளர் கார்த்-திகேயன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

