ADDED : ஆக 26, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:தமிழக இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸில் இணைத்து, ஓட்டுச்சாவடி வரை கொண்டு செல்லும் வகையில், இளைஞர்கள் எழுச்சி பயணம் என்ற நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.  மாவட்டந்-தோறும் நடந்து வரும் இந்த நிகழ்ச்சி, 11 மாவட்டமாக, நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில் ராசிபுரத்தில்  இளைஞர் எழுச்சி பயணம் நடந்-தது.
இதில், இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின்பிரசாந் கலந்து-கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.  மாநில செயலாளர் அருளானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், சுப்பிர-மணி, இளைஞர் காங்கிரஸ் சட்டசபை தலைவர்கள் தனசேகர், செந்தில்குமார், மயில்சாமி, பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்-டனர்.

