/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டையில்ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்
/
நாமகிரிப்பேட்டையில்ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்
ADDED : ஏப் 16, 2025 01:19 AM
நாமகிரிப்பேட்டையில்ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில், நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த, ஐந்து வாரங்களுக்கு முன் மஞ்சள் வரத்து தொடங்கியது.
நேற்று, விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,002 ரூபாய், அதிகபட்சம், 16,183 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 11,899 ரூபாய், அதிகபட்சம், 14,099 ரூபாய்; பனங்காலி, 8,602 ரூபாயிலிருந்து, 27,699 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 699 மூட்டை, உருண்டை, 348, பனங்காலி, 42 என, மொத்தம், 1,089 மூட்டை மஞ்சள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.