/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சியில் 103 டன் குப்பை அகற்றம்
/
நாமக்கல் மாநகராட்சியில் 103 டன் குப்பை அகற்றம்
ADDED : அக் 13, 2024 08:43 AM
நாமக்கல்: ஆயுதபூஜையையொட்டி, நாமக்கல் மாநகராட்சியில் ஒரே நாளில், 103 டன் குப்பை அகற்றப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகளில், 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினசரி வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும், 80 டன் வீதம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், ஆயுதபூஜையால், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்து பொதுமக்கள் ஆயுதபூஜையை கொண்டாடினர்.
பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் வாழை மரங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
இந்த வாழை மரங்கள் மற்றும் மாவிழை தோரணங்களை, ஆங்காங்கே சாலையோரம் போட்டுவிட்டு
சென்றனர். அதனால், நேற்று காலையில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடந்தன. இரண்டு
நாட்களில் மட்டும் வழக்கமான குப்பை, 80 டன், ஆயுதபூஜை குப்பை, 103 டன் அகற்றப்பட்டது.பள்ளிப்பாளையத்தில்...பள்ளிப்பாளையம் நகராட்சியில் அதிகளவு விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இதனை சார்ந்து
லேத் பட்டறைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆயுதபூஜைக்கு சுவாமி
கும்பிட, சுததம் செய்து தேவையில்லாத கழிவுகள், பொருட்கள் வெளியே கொட்டினர். மேலும், சாலை
பகுதியில் பல இடங்களில் வாழை மரம் விற்பனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மேல் விற்பனை முடிந்தவுடன், மீதமான வாழை மரங்களை அப்படியே போட்டு
விட்டு சென்றனர். நேற்று நகராட்சி துாய்மை பணியாளர்கள், 12 டன் வாழை மரம், 12 டன் குப்பை கழிவு
என, மொத்தம், 24 டன் குப்பையை லாரிகளில் அள்ளிச் சென்றனர். அவற்றை தரம் பிரித்து, உரத்திற்கு
விளை நிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.