/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1.08 லட்சம் வடை தயாரிப்பு பணி துவக்கம்
/
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1.08 லட்சம் வடை தயாரிப்பு பணி துவக்கம்
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1.08 லட்சம் வடை தயாரிப்பு பணி துவக்கம்
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1.08 லட்சம் வடை தயாரிப்பு பணி துவக்கம்
ADDED : ஜன 08, 2024 12:29 PM
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும், ௧௧ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அன்று காலை, ௧௮ அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1.08 லட்சம் வடைமாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடக்கும். இதற்காக வடை தயாரிக்கும் பணி, கோவில் வளாக மண்டபத்தில் நேற்று துவங்கியது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையில், 34 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: 1.08 லட்சம் வடை தயாரிப்பதற்கு, 2,050 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு பயன்படுத்தப்படுகிறது. 10ம் தேதி பணி முடியும். இதையடுத்து கயிற்றில் மாலையாக கோர்க்கப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.