/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் 131 கிலோ பறிமுதல்: 3 பேருக்கு 'காப்பு'
/
போதைப்பொருள் 131 கிலோ பறிமுதல்: 3 பேருக்கு 'காப்பு'
போதைப்பொருள் 131 கிலோ பறிமுதல்: 3 பேருக்கு 'காப்பு'
போதைப்பொருள் 131 கிலோ பறிமுதல்: 3 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 25, 2024 03:15 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிக-ரித்திருப்பதாக வந்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் தவமணி தலை-மையிலான போலீசார், காவேரி நகர், புதிய காவேரி பாலம் அருகே, நேற்று காலை, 10:00 மணிக்கு ரோந்து பணி மேற்-கொண்டனர். அப்போது, 'டி.வி.எஸ்., எக்ஸல்' டூவீலரில் வந்த, அபெக்ஸ் காலனியை சேர்ந்த ஜெயராமன், 60, என்பவர், 'மாருதி ஆல்டோ' காரில் வந்த ரவீந்திரன், 34, என்பவரிடம், 125 கிலோ போதை பொருட்களை வாங்கி, டூவீலரில் வைத்தார். அப்போது கையும், களவுமாக பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், குமாரபாளையம் கம்பர் தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போதைப்பொருள் விற்ற சாந்தா, 44, என்-பவரை கைது செய்து, 6.300 கிலோ போதைப்பொருட்களை பறி-முதல் செய்தனர். இரு வழக்குகளில், மொத்தம், 131 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.