/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடத்தல் ரேஷன் அரிசி 1,320 கிலோ பறிமுதல்
/
கடத்தல் ரேஷன் அரிசி 1,320 கிலோ பறிமுதல்
ADDED : டிச 04, 2024 06:54 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருடன் இணைந்து திருச்செங்கோடு -- சேலம் சாலையில் கொல்லப்பட்டி சந்திப்பில், நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பியோட முயற்சி செய்தார்.
அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் திருசெங்கோடு, சிக்கநாயக்கன்பாளையம், குடித்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் முத்துகுமார், 24, என்பது தெரிந்தது. ஆம்னி வேனில், 22 சாக்கு மூட்டைகளில், 1,320 கிலோ ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முத்து குமாரை கைது செய்தனர்.