sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாளில் 141 டன் காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாளில் 141 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாளில் 141 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாளில் 141 டன் காய்கறி விற்பனை


ADDED : ஜன 15, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 15, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், மூன்று நாட்களில், 141 டன் காய்கறி, 63 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கடந்த, மூன்று நாட்களில், வழக்கத்தை காட்டிலும், உழவர் சந்தையில், காய்கறி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம், 524 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், ஒரு லட்சத்து, 8,615 கிலோ காய்கறிகள் மற்றும் 32,715 கிலோ பழங்கள், 50 கிலோ பூக்கள் என மொத்தம், ஒரு லட்சத்து, 41,380 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

அவற்றை, 28,276 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 63 லட்சத்து, 4,940 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி, 20 ரூபாய், கத்திரி, 48 ரூபாய், அவரை, 130 ரூபாய், சின்ன வெங்காயம், 65 ரூபாய், பெரிய வெங்காயம், 40 ரூபாய், இஞ்சி, 50 ரூபாய், பூண்டு, 270 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us