sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

16ல் லோக்சபா தொகுதி தேர்தல் பொதுக்கூட்டம் தி.மு.க., - எம்.பி., அழைப்பு

/

16ல் லோக்சபா தொகுதி தேர்தல் பொதுக்கூட்டம் தி.மு.க., - எம்.பி., அழைப்பு

16ல் லோக்சபா தொகுதி தேர்தல் பொதுக்கூட்டம் தி.மு.க., - எம்.பி., அழைப்பு

16ல் லோக்சபா தொகுதி தேர்தல் பொதுக்கூட்டம் தி.மு.க., - எம்.பி., அழைப்பு


ADDED : பிப் 13, 2024 12:18 PM

Google News

ADDED : பிப் 13, 2024 12:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'லோக்சபா தொகுதிக்கான, தி.மு.க., தேர்தல் பிரசாரக் கூட்டம், வரும், 16ல் நாமக்கல்லில் நடக்கிறது' என, கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, முதல்கட்டமாக, 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் பிரசாரம் நடக்கிறது. வரும், 16 மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில், லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகிக்கிறார். எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று பேசுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்.

இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us