/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 17ம் ஆண்டு விளையாட்டு விழா
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 17ம் ஆண்டு விளையாட்டு விழா
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 17ம் ஆண்டு விளையாட்டு விழா
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 17ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : செப் 23, 2025 01:39 AM
குமாரபாளையம் :குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியின், 17ம் ஆண்டு விளையாட்டு விழா, தாளாளர் அன்பழகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயக்குமார் பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் அணிவகுப்பு நிகழ்த்தி, சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். மேலும், ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து, சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பள்ளியின் நான்கு அணிகள் சார்பில் இளையோர், மூத்தோருக்கான, 50 மீ., 60 மீ., 100 மீ., தடகள போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், கோப்பை வழங்கப்பட்டது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ, நிர்வாக குழு உறுப்பினர்கள், ஸ்ரீ வாரி அறக்கட்டளை அங்கத்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பெருமளவில் பங்கேற்றனர்.