ADDED : செப் 16, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி, பிரேம் நகர், கரட்டாங்காடு, வசந்த நகர், முனியப்பன் நகர், புதுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில், நேற்று மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
திடீரென அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'காட்டூர் பகுதியில் மின்கம்பத்தில் பிரதான மின் ஒயர் சேதமடைந்து விட்டது. இப்பணி முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது' என்றனர்.