sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபட் - கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி

/

மொபட் - கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி

மொபட் - கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி

மொபட் - கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி


ADDED : அக் 15, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு:மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இரண்டு பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வாலரைகேட், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கலியபெருமாள், 65; திருச்செங்கோடு, நாராயணபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 65. இருவரும், பழைய டயர் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று காலை, 7:30 மணிக்கு, 'டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர்' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், மலைசுற்று பாதை வழியாக, நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

சாலையில் மழைநீர் தேங்கியிருந்ததால் அதில் செல்லாமல், வலதுபுறம் செல்வதற்காக மொபட்டை திருப்பிய போது, எதிரே நாமக்கல்லில் இருந்து கோவை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் மொபட் சிக்கியது.

இதில், கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கிய கலியபெருமாள், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

படுகாயமடைந்த மாரிமுத்து தனியார் மருத்துவமனையில் இறந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us