sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்

/

பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்

பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்

பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்


ADDED : அக் 22, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதுகாப்பு பணியில்

2,000 போலீசார்

நாமக்கல், அக். 22-

தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார். சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வரும் முதல்வர், மதியம், 12:30 மணிக்கு, நாமக்கல் - பரமத்தி சாலையில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, நாமக்கல் - -சேலம் புறவழிச்சாலை பொம்மைக்குட்டைமேட்டில் நடக்கும் அரசு விழாவில், பழங்குடியின பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்குகிறார்.

மகளிர் சுய உதவிக்குழு மூலம், 'பிளை ஆஷ்' செங்கல் தயாரிக்கும் தொழிற்கூடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், 16,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு, கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் தலைமையில், மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலத்தை சேர்ந்த, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us