/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.30 லட்சத்துக்கு வாழைப்பழம் விற்பனை
/
ரூ.2.30 லட்சத்துக்கு வாழைப்பழம் விற்பனை
ADDED : ஏப் 06, 2025 01:10 AM
ரூ.2.30 லட்சத்துக்கு வாழைப்பழம் விற்பனை
ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 2.30 லட்சம் ரூபாய்க்கு வாழைப்பழம் விற்பனையானது. ராசிபுரம் உழவர் சந்தையில், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி என மாவட்டத்தின் எல்லை பகுதியில் இருந்தும், ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றியத்தில் இருந்தும் அதிக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, தக்காளி ஒருகிலோ, 10, கத்தரி, 45, வெண்டை, 34, புடலை, 30, பீர்க்கன்காய், 40, பாகல், 40, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 35, முருங்கை, 25, சின்ன வெங்காயம், 37, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 18, கேரட், 50, பீன்ஸ், 90, பீட்ரூட், 35, வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 60 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 212 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 26,495 கிலோ காய்கறி, 7,275 கிலோ பழங்கள், 410 கிலோ பூக்கள் என மொத்தம், 34,180 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 11.19 லட்சம் ரூபாயாகும். 6,323 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், வாழைப்பழம் மட்டும், 2.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.