/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலை வாய்ப்பு முகாமில் 25 பேர் தேர்வு
/
வேலை வாய்ப்பு முகாமில் 25 பேர் தேர்வு
ADDED : அக் 19, 2025 04:22 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமையிலும், இளநிலை அலுவலர்கள் சுதா, சண்முகம் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.
அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 14 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. பல்வேறு பகுதியில் இருந்து, 80 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.