/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் ரூ.3.20 லட்சத்துக்கு ஏலம்
/
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் ரூ.3.20 லட்சத்துக்கு ஏலம்
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் ரூ.3.20 லட்சத்துக்கு ஏலம்
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் ரூ.3.20 லட்சத்துக்கு ஏலம்
ADDED : டிச 01, 2024 01:30 AM
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த
25 வாகனங்கள் ரூ.3.20 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல், டிச. 1-
மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, ஒரு கார், 24 டூவீலர்கள் என, மொத்தம், 25 வாகனங்கள், 3.20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்றங்களில், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றிய, ஒரு கார், 24 டூவீலர்கள் என, 25 வாகனங்கள், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், நேற்று ஏலம் விடப்பட்டன. 50க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக, பொது ஏலம் நடப்பதற்கு முன்தினம், ஏலத்தில் பங்கேற்றவர்கள், ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை நேரில் பார்வையிட்டனர். முன் பணமாக, 5,000 ரூபாய் செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி நடந்த ஏலத்தில், கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்தார்.
மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சங்கரபாண்டியன், பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அரசு நிர்ணயம் செய்த விலையில் இருந்து போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதிக விலைக்கு ஏலம் கோரியவர்களுக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது. முடிவில், ஒரு கார், 24 டூவீலர்கள், மூன்று லட்சத்து, 20,694 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தவர்கள், ஜி.எஸ்.டி.,யுடன் உடனடியாக பணத்தை செலுத்தி, வாகனங்களை பெற்றுச்சென்றனர். கலால் மற்றும் ஆயத்தீர்வை அலுவலர், அரசு போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளர் கோமளவல்லி, போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.