/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,500 டன் மக்காச்சோளம் வரத்து
/
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,500 டன் மக்காச்சோளம் வரத்து
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,500 டன் மக்காச்சோளம் வரத்து
பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,500 டன் மக்காச்சோளம் வரத்து
ADDED : செப் 24, 2024 01:27 AM
நாமக்கல்: பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு, 2500 டன் மக்காச்சோளம் சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்டவையும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து இறக்கு-மதி செய்யப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக, 2,500 டன் மக்காச்சோ-ளத்தை, பீஹார் மாநிலம் சீமாபூரில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல்
ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், அங்கிருந்து, 90 லாரிகளில் ஏற்றி அரவை ஆலை குடோன்க-ளுக்கு கொண்டு செல்லப்பட்டன.