/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சாபில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை வரவழைப்பு
/
பஞ்சாபில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாபில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாபில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை வரவழைப்பு
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவிடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி, பஞ்சப் மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் கோதுமை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வந்தது. இங்கிருந்து, 150க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நல்லிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவனம், மத்தியபிரதேச மாநிலம், கந்துவாவில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,500 டன் சோயா, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்தது. அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.