/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்கு வரத்து
/
2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்கு வரத்து
ADDED : ஜூலை 30, 2025 01:37 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக மகாராஷ்டிராவில் இருந்து, 2,600 டன் மக்காச்சோளம் சரக்கு ரயில்லில் வரத்தானது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் வரத்தாகிறது.
அந்த வகையில், கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக மகாராஷ்டிரா மாநிலம், மலக்காபூரில் இருந்து, 2,600 டன் மக்காச்சோளத்தை, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து, 150க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதியில் செயல்படும் தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.