/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஏ.சி.பி., சங்கத்தினரின் 2ம் நாள் ஸ்டிரைக்கால் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
பி.ஏ.சி.பி., சங்கத்தினரின் 2ம் நாள் ஸ்டிரைக்கால் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
பி.ஏ.சி.பி., சங்கத்தினரின் 2ம் நாள் ஸ்டிரைக்கால் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
பி.ஏ.சி.பி., சங்கத்தினரின் 2ம் நாள் ஸ்டிரைக்கால் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : அக் 23, 2024 01:43 AM
பி.ஏ.சி.பி., சங்கத்தினரின் 2ம் நாள் ஸ்டிரைக்கால்
பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
நாமக்கல், அக். 23-
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினரின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம், 2ம் நாளாக தொடர்வதால் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவித்தனர். தமிழகம் முழுதும், 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 20,000க்கும் அதிகமான கடைகள், கிராமப்புறங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில், 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பல்வேறு கோரிக்கையை, அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாப்படுத்துகின்றனர். காலாவதியான பொருட்களுக்கு சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் வசூல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும், கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள், 100 கி.மீ., தள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக விற்பனையாளர்களை தேர்வு செய்வதற்கு முன், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பணியிட மாறுதல் செய்து, காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை இதுவரை அரசு நிறைவேற்றாததால், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இப்போராட்டம், நேற்று இரண்டாம் நாளாக நீடித்தது. அதில், சில ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், அத்தியாவசிய பொருட்கள் பெறமுடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், நகை, பயிர் கடன் பெறமுடியாத நிலையில், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

