ADDED : மே 22, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில், புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், கம்பன் நகர், கத்தேரி பிரிவு, பழைய பள்ளிப்பாளையம் சாலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த மாதேஸ்வரன், 45, முத்துக்குமார், 45, முருகன், 47, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.