/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது
/
பழைய இரும்பு கடையில் மோட்டார் திருடிய 3 பேர் கைது
ADDED : ஏப் 24, 2025 02:03 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 40; இவர், அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு வழக்கம்போல் கடையை திறந்தார்.
அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை, மூன்று பேர் திருட முயற்சித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவுரிசங்கர், பள்ளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மின் மோட்டாரை திருடிய, 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில், சந்தைப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 22, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜீவா, 22, மற்றொரு மண்கண்டன், 23, என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.