sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்

/

டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்

டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்

டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்


ADDED : பிப் 28, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 28, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, சேந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில், 'ஸ்பேனர்' செட்டுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த, மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் சரவணன், 43, மணியனுார், விவேகானந்தர் தெருவை சேர்ந்த பழனி மகன் மணி, 55, கொண்டலாம்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் சுரேஷ், 32, ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து, அருகில் உள்ள நுால் மில்லில் இயந்திரங்களை திருட சென்றது தெரிந்தது. மூவரையும், ராசிபுரம் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், சரவணன் மீது ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், கடந்தாண்டு வெண்ணந்துாரில் டிரான்ஸ்பார்மர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us