sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகையிலை விற்ற 3 கடைக்கு 'சீல்': ரூ.55,000 அபராதம் விதிப்பு

/

புகையிலை விற்ற 3 கடைக்கு 'சீல்': ரூ.55,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற 3 கடைக்கு 'சீல்': ரூ.55,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற 3 கடைக்கு 'சீல்': ரூ.55,000 அபராதம் விதிப்பு


ADDED : மார் 18, 2024 02:53 AM

Google News

ADDED : மார் 18, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற, 3 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுதும் கடந்த, 4 மாதங்களாக உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேந்தமங்கலம் டவுன் பஞ்., பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அதிகளவில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேந்தமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஜங்கலாபுரம் கிழக்கு தெருவில் உள்ள கீதா, 42, சாலையூரை சேர்ந்த சேகர், 50, பொட்டனத்தை சேர்ந்த சிங்காரவேல், 52, ஆகியோரது பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பெட்டி கடைகளுக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், 55,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் கூறுகையில், ''கடந்த, 4 மாதமாக மாவட்டம் முழுதும் கூட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 179 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,632 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us