sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிலம் அளக்க ரூ.2,000 லஞ்சம்: சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை

/

நிலம் அளக்க ரூ.2,000 லஞ்சம்: சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை

நிலம் அளக்க ரூ.2,000 லஞ்சம்: சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை

நிலம் அளக்க ரூ.2,000 லஞ்சம்: சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : ஜன 25, 2024 10:43 AM

Google News

ADDED : ஜன 25, 2024 10:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 47; விவசாயி. இவர், தனது நிலத்தை அளந்து அத்து காண்பிக்க, பள்ளிப்பாளையம் சர்வேயர் கருப்பண்ணனிடம், கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத பிரகாஷ், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனைப்படி, பவுடர் தடவிய, 2,000 ரூபாய் பணத்தை, 2009 அக்., 6ல், சர்வேயர் கருப்பண்ணனிடம், பிரகாஷ் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக, சர்வேயர் கருப்பண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக, 3 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், லஞ்சம் வாங்கியதற்காக, 3 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us