/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்'
/
'பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்'
'பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்'
'பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்'
ADDED : செப் 23, 2024 05:33 AM
ராசிபுரம்: ''பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தான், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கின்றனர்,'' என, பா.ஜ., மாநில துணைத்த-லைவர் ராமலிங்கம் கூறினார்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, நாடு முழுதும், பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ராசிபுரம் அருகே, மருத்துவ முகாம் நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. நாடு முழுவதும், 6 மாதத்திற்கு ஒரு தேர்தல் நடக்கிறது. இதில், தேர்த-லுக்கு முன், 3 மாதமும் பின், 3 மாதமும் பணிகள் முடங்குகின்-றன. தேர்தலுக்காக, நாட்டின் வருவாயில், 20 சதவீதம் வரை செலவாகிறது. பணம் கொடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகள் தான், ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கின்றனர். பொதுமக்களின் ஆத-ரவோடு ஆட்சிக்கு வருபவர்கள், இதனை ஏற்பார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் மிக மிக அவசியம். இதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை தீர்த்து வைத்து, பா.ஜ., ஒரே நாடு, ஒரே தேர்தலை செயல்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.