/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராகவேந்திரா சுவாமியின் 354வது ஆராதனை விழா
/
ராகவேந்திரா சுவாமியின் 354வது ஆராதனை விழா
ADDED : ஆக 11, 2025 06:00 AM
நாமக்கல்: நாமக்கல் மத்வ சேவா சங்கம் சார்பில், ஆஞ்ச-நேயர் கோவில் அருகே உள்ள முல்லை மஹாலில் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் புண்-ணிய தின, 354வது ஆராதனை மஹோத்ஸவ சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு நிர்மால்யம், 9:00 மணிக்கு அபிஷேகம், 11:00 மணிக்கு மகா மங்களாரத்தி, மதியம், 12:00 மணிக்கு அலங்காரபந்தி, 1:00 மணிக்கு தீர்த்த ப்ரஸாதம் நடந்தது. இதில் சுற்று-வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்-கேற்றனர்.
அதேபோல், நாமக்கல் இந்திரா நகர் சீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் குரு ராகவேந்திரா சுவாமிகளின் ஆராதனை மஹோற்சவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதையொட்டி, காலை, 9:00 மணிக்கு ராகவேந்திரா சுவாமிகளின் பிருந்-தாவன் மகா அபிஷேகம், 11:30 மணிக்கு ஷோடச உபசாரம், மகாதீப ஆராதனை, மதியம், 12:00 மணிக்கு பாபா ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. சுற்று-வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்-கேற்றனர்.