/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
368 கிலோ பட்டுக்கூடு ரூ.1.68 லட்சத்துக்கு ஏலம்
/
368 கிலோ பட்டுக்கூடு ரூ.1.68 லட்சத்துக்கு ஏலம்
ADDED : செப் 06, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 368 கிலோ பட்டுக்கூடு, 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 368.85 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 520 ரூபாய், குறைந்தபட்சமாக, 400 ரூபாய், சராசரியாக கிலோ, 456.45 ரூபாய்க்கு விற்பனையானது. 368.85 கிலோ பட்டுக்கூடு, 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.