/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது
/
4 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது
ADDED : ஆக 13, 2025 05:47 AM
திருச்செங்கோடு: மல்லசமுத்திரம், பொன்னியாறு பாலம் அருகே, இரண்டு வாலி-பர்கள் கஞ்சா விற்பதாக, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார் சம்-பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றி-ருந்த, இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டம், பலகிரி பகன்போர் பகுதியை சேர்ந்த அஜய்ராவுத், 35, திலீப்குமார் சேத்தி, 28, என்-பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவர்களிடம் இருந்து, 4.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை கைது செயத்னர். கைது செய்யப்-பட்ட இருவரையும், திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கஞ்சா வைத்தி-ருந்த இருவரையும், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.