/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெறிநாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை
/
வெறிநாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை
ADDED : செப் 29, 2024 01:34 AM
வெறிநாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை
நாமகிரிப்பேட்டை, செப். 29-
நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம் போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. நேற்று காலை, தொப்பம்பட்டி காட்டுக்கொட்டாய் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகினி, 50, விவசாய வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை வெறிநாய் கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீதரன், 14, பழனியம்மாள், குமார் உள்ளிட்ட, 4 பேரை அந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள், தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சில மாதங்களுக்கு முன் இதேபோல் நாய்க்கடி சம்பவம் இப்பகுதியில் நடந்துள்ளது. சாலையில் அதிகளவு நாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் பயந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பஞ்., நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.