/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தகுதி சான்று புதுப்பிக்காத 4 வாகனங்கள் பறிமுதல்
/
தகுதி சான்று புதுப்பிக்காத 4 வாகனங்கள் பறிமுதல்
ADDED : அக் 31, 2024 06:38 AM
நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்-வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.அப்போது, விதிமுறை மீறி இயக்கப்பட்ட, 20 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்-பட்டது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட, 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்-பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.
அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி செலுத்-தாமல் இயக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்-பட்டது. விதிமுறை மீறி இயக்கப்பட்ட வாகனங்-களுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து, 60,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்-பட்டது.