sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்

/

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்


ADDED : ஜூன் 26, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் 'மாவு அரைக்கும் தொழிலுக்காக, கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் (பொ) சுமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், பொருளாதார ரீதியாக முன்னேறவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-26ம் நிதியாண்டிற்காக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் தொழில் செய்வதற்காக, வணிக ரீதியிலான கிரைண்டர்கள் வாங்கும் போது, மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய்- மானிய தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள், தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் தாசில்தாரிடம் பெறப்பட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஜூலை, 14க்குள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us