sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொங்கல் பண்டிகைக்கு 5,40,000 கரும்புகள் கொள்முதல்: கலெக்டர்

/

பொங்கல் பண்டிகைக்கு 5,40,000 கரும்புகள் கொள்முதல்: கலெக்டர்

பொங்கல் பண்டிகைக்கு 5,40,000 கரும்புகள் கொள்முதல்: கலெக்டர்

பொங்கல் பண்டிகைக்கு 5,40,000 கரும்புகள் கொள்முதல்: கலெக்டர்


ADDED : ஜன 03, 2025 01:11 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ஜன. 3-

பொங்கல் பண்டிகைக்கு நாமக்கல் மாவட்டத்தில், 5,40,000 கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. என, கலெக்டர் உமா தெரிவித்தார்.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சமயசங்கிலி, அக்ரஹாரம் பகுதிகளில் நேற்று கலெக்டர் உமா பொங்கல் பரிசு தொகுப்புகளில் வழங்குவதற்காக, கரும்பு தேர்வு செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்புகளில் வழங்குவதற்காக கரும்பு தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, கரும்பின் நீளம், தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: பொங்கல் பண்டிகை கொண்டாட, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள கரும்புகளை, இடைத்தரகர்கள் இன்றி அரசு துறையினர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு சார்பில் ஒரு கரும்பிற்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 5,40,000 கரும்புகள் உள்ளது என வேளாண் துறையினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்தாண்டு விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு விளைவித்துள்ளனர். தற்போது, 5,40,000 கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us