/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.33 லட்சத்திற்கு விற்பனை
/
தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.33 லட்சத்திற்கு விற்பனை
தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.33 லட்சத்திற்கு விற்பனை
தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.33 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நாமக்கல்: தமிழ் புத்தாண்டையொட்டி, நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 57 டன் காய்கறி, 21.33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு மற்றும் பல்வேறு பகுதிகளிலும், திருவிழா சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 216 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம், 47,790 கிலோ காய்கறி, 10,120 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 57,930 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,586 பேர் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனர்.அதன் மூலம், 21 லட்சத்து, 33,115 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி, ஒரு கிலோ, 18 ரூபாய், கத்தரி, 36 ரூபாய், வெண்டை, 40 ரூபாய், புடலங்காய், 60 ரூபாய், பீர்க்கங்காய், 60 ரூபாய், பாகற்காய், 36 ரூபாய், சின்ன வெங்காயம், 40 ரூபாய், பெரிய வெங்காயம், 30 ரூபாய், தேங்காய், 62 ரூபாய், இஞ்சி, 45 ரூபாய், பூண்டு, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.