ADDED : ஜூலை 10, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் ;ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 576 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சம் கிலோ, 566 ரூபாய், குறைந்தபட்சம், 310 ரூபாய், சராசரி, 509.55 ரூபாய் என, 576 கிலோ பட்டுக்கூடு, இரண்டு லட்சத்து, 93,524 ரூபாய்க்கு விற்பனையானது.

