/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேராசிரியையிடம்6 பவுன் நகை வழிப்பறி
/
பேராசிரியையிடம்6 பவுன் நகை வழிப்பறி
ADDED : மார் 30, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேராசிரியையிடம்6 பவுன் நகை வழிப்பறி
புதுச்சத்திரம்:ராசிபுரம், கண்ணையா தெருவை சேர்ந்தவர் பாவியா, 34; இவர், புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியை. நேற்று காலை, வழக்கம்போல் டூவீலரில் கல்லுாரிக்கு புறப்பட்டுள்ளார். அவரை பின் தொடர்ந்து டூவீலரில் சென்ற நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். பதறி போன பேராசிரியை, புதுச்சத்திரம் போலீசில் அளித்த புகார்படி, நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.