/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஸ்பா' சென்டரில் கைவரிசை 'போலி' போலீசார் 6 பேர் கைது
/
'ஸ்பா' சென்டரில் கைவரிசை 'போலி' போலீசார் 6 பேர் கைது
'ஸ்பா' சென்டரில் கைவரிசை 'போலி' போலீசார் 6 பேர் கைது
'ஸ்பா' சென்டரில் கைவரிசை 'போலி' போலீசார் 6 பேர் கைது
ADDED : ஏப் 24, 2025 02:18 AM
நாமக்கல்:'ஸ்பா' சென்டரில் புகுந்து கைவரிசை காட்டிய, 'போலி' போலீசார் ஆறு பேரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், சேலம் மாவட்டம், மல்லுாரை சேர்ந்த இளங்கோவன், 'ஸ்பா' என்ற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இம்மையத்திற்கு, ஏப்., 18ல் காரில் ஆறு பேர், டூ - வீலரில் இரண்டு பேர் என, 8 பேர் வந்தனர். தாங்கள் போலீசார் என்றும், 'ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றும் கூறினர்.
திடீரென அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி, ஒரே அறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஒன்றே முக்கால் சவரன் நகை, 40,000 ரூபாய், மொபைல் போனை பறித்துக்கொண்டு, 'சிசிடிவி' கேமரா 'ஹார்ட் டிஸ்க்'கையும் எடுத்துக்கொண்டு தப்பினர்.
நாமக்கல் போலீசார், நான்கு தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடினர். அப்பகுதி 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர்கள் முகங்கள் அடையாளம் தெரிந்தது.
கும்பல் தப்பிய கார், டூ - வீலர் எண்ணை வைத்து விசாரணை நடத்தி, கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த விமல் பஷீர், 27, ராஜசேகரன், 25, தான்தோன்றிமலை யுவராஜ், 24, புகழூர் செல்வமாணிக்கம், 27, நாமக்கல் மாவட்டம், செங்கப்பள்ளி கார்த்திகேயன், 25, சந்துரு, 24 ஆகிய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம், 16,000 ரூபாய், ஒரு மொபைல் போன், ஒன்றே முக்கால் சவரன் நகை, 'ஹோண்டா' சிட்டி கார், 'பஜாஜ் பல்சர்' டூ - வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

