/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 61 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 61 டன் காய்கறி விற்பனை
ADDED : ஆக 11, 2025 06:11 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 61 டன் காய்கறிகள், 25.63 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பொது-மக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதே-வையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். நேற்று உழவர் சந்தையில் விறுவி-றுப்பாக வியாபாரம் நடந்தது. 187 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
மொத்தம், 47,370 கிலோ காய்கறிகள், 13,700 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என மொத்தம், 61,105 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 12,221 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். அவற்றின் மூலம், 25 லட்சத்து, 63,320 ரூபாய் அளவிற்கு விற்பனையானது.

