sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்

/

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜன 09, 2025 07:49 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் தகுதி சான்று இல்லாமல், வரி செலுத்தாமல் இயக்-கிய, 7 ஆம்புலன்ஸ் வாகனங்களை, வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், அதிக அளவில் ஆம்புலன்ஸ் வாக-னங்கள் இயங்கி வருகின்றன. அவை ஆண்டு தோறும், புதுப்பிப்-பதுடன், முறையான ஆவணங்களை கொண்டு இயக்க வேண்டும். காரணம், விபத்தில் சிக்கும் நபர்களையும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, ஆண்டு தோறும், வட்டார போக்குவரத்து துறையினர், தகுதி சான்று பெறாத, புதுப்பிக்காத வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024, டிச., 15 முதல், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர், நாமக்கல் மாந-கராட்சிக்கு உட்பட்ட திருச்செங்கோடு சாலை, திருச்சி சாலை, மோகனுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும், சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்-திற்கு தகுதி சான்று புதுப்பிக்காததும், வரி செலுத்தாததும் தெரிய-வந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.அதையடுத்து, ஏழு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்-பட்டு, 1.50 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. அதேபோல், ஐந்து ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இயக்கிய ஜே.சி.பி., வாகனம், ஓன் போர்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us