/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
714 கிலோ பட்டுக்கூடு ரூ.3.44 லட்சத்திற்கு ஏலம்
/
714 கிலோ பட்டுக்கூடு ரூ.3.44 லட்சத்திற்கு ஏலம்
ADDED : செப் 29, 2024 01:33 AM
714 கிலோ பட்டுக்கூடு
ரூ.3.44 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம், செப். 29-
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 714 கிலோ பட்டுக்கூடு, 3.44 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 714.33 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 550 ரூபாய், குறைந்தபட்சம், 350 ரூபாய், சராசரி, 481.95 ரூபாய் என, 714.33 கிலோ பட்டுக்கூடு, 3.44 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.