/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்
/
நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்
ADDED : டிச 24, 2024 01:50 AM
குமாரபாளையம், டிச. 24-
கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று, நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென இடதுபுறம் திரும்பி சென்றதால், அரசு பஸ் டிரைவர், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார், 43, பஸ்சை வலதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது, அங்கு பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரி மீது மோதியது.
இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த பயணிகள் பகுத்தறிவு, 23, மருதமுத்து, 40, நஞ்சம்மாள், 48, பிரசாந்த், 22, முத்துராஜா, 37, கவிபிரியா, 11, லோகாம்பாள், 37, ராகதேவன், 23, ஆகிய, 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி டிரைவர், திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார், 23, என்பவரை தேடி வருகின்றனர்.