/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்
/
ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்
ADDED : அக் 08, 2024 04:16 AM
ப.வேலுார்: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே, சீரம்பட்டியை சேர்ந்தவர் பழனி, 37; இவரது மனைவி மீனாட்சி, 33; தம்பதியருக்கு ஹரீஷ், 3, என்ற குழந்தை இருந்தது. இவர்கள், ப.வேலுார் அருகே, நாகப்பாளையம் கிராமத்தில் உள்ள வெல்லம் தயா-ரிக்கும் ஆலையில், குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்-தனர்.
கடந்த, 5ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காவிரி-யாற்றில் மனைவி, குழந்தையுடன், பழனி குளித்து கொண்டி-ருந்தார்.அப்போது, அருகில் இருந்த குழந்தை ஹரீஷ், திடீரென காண-வில்லை. பதறிய பெற்றோர், தண்ணீரில் மூழ்கி குழந்தையை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த வேலாயு-தம்பாளையம் தீயணைப்புத்துறையினர், கடந்த மூன்று நாட்க-ளாக குழந்தையை தேடி வருகின்றனர். ஆனால், இன்னும் கிடைக்கவில்லை. ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வரு-கின்றனர். குளித்துக் கொண்டிருந்த குழந்தை தண்ணீரில் மாய-மான சம்பவம், அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.