sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்

/

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்


ADDED : ஜூலை 27, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, பறவைக்காட்டை சேர்ந்-தவர் ரமேஷ், 35; இவரது முதல் மனைவி பூங்கொடியுடன் வசித்து வருகிறார். ரமேஷின் இரண்டாவது மனைவி மணிமே-கலை, 29. இவர், பட்டணம் அடுத்த குச்சிக்காடு பகுதியில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பட்டணம் ஏரிக்கரையில் எரிந்த நிலையில் மணிமேகலை இறந்து கிடந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குச்சிக்காட்டை சேர்ந்த கைலாசம் மகன் பாலசுப்ரமணி, 27; கட்டட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி, ஆறு மாதத்தில் குழந்தை உள்ளது. இவர், ரமேஷின் இரண்டாவது மனைவி வீட்டின் அருகே வசித்து வந்தார். இவருக்கும், மணிமேகலைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்-பட்டது. கடந்த வாரம், பாலசுப்ரமணி, மணிமேகலையை கூட்டிச்-சென்று ஆத்துாரில் வீடு எடுத்து தங்க வைத்தார். தனியாக இருந்த மணிமேகலை, பாலசுப்ரமணியிடம் பணம் கேட்டு நச்சரித்-துள்ளார். இதையடுத்து கடந்த, 24ம் தேதி, மணிமேகலையை பட்-டணம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற பாலசுப்ரமணி, அங்கு தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது, மணிமேகலை, பாலசுப்ரமணியிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணி, 'உன் கணவனுடன் சென்றுவிடு' என, திட்டியுள்ளார். இதில் இருவ-ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பாலசுப்ரமணி, மணிமேக-லையை கல்லால் அடித்து கொலை செய்தார். பின், பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்த பாலசுப்ர-மணி, சடலம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தலைம-றைவானார். சந்தேகத்தின் பேரில் பாலசுப்ரமணியிடம் போலீசார் விசாரித்தபோது, வெளியூரில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், உள்ளூரில் இருந்த பாலசுப்ரமணியை பிடித்து விசாரித்த போது, மணிமேகலையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை-யடுத்து பாலசுப்ரமணியை கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us