/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
/
தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
ADDED : அக் 08, 2024 04:23 AM
ராசிபுரம்: ராசிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 57; விவசாயி. இவர் வளர்த்து வந்த பசுமாட்டை மேய்ச்சலுக்கு, நேற்று மாலை அவிழ்த்து விட்-டுள்ளார்.
மேய்ச்சலுக்கு சென்ற மாடு குடிநீர் குழாய்க்கு அமைக்கப்பட்-டுள்ள, 5 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்தது. நீண்ட நேரமா-கியும் பசு மாடு வீட்டிற்கு வராததால், ராமசாமி மாட்டை தேடி சென்றார்.
அப்போது, சாலையோரம் இருந்த நீர்தொட்டியில் இருந்து மாடு கத்தும் சத்தம் கேட்டது. இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறை-யினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவி-யுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மாட்டிற்கு ஆங்காங்கே காயம் ஏற்பட்டதால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்-தனர்.