ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 178.100 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய், குறைந்தபட்சம், 220 ரூபாய், சராசரி, 347.75 ரூபாய் என, 178.1 கிலோ பட்டுக்கூடு, 61,000 ரூபாய்க்கு விற்பனையானது.