sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் அருகே 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் வினோத நிகழ்வு

/

மோகனுார் அருகே 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் வினோத நிகழ்வு

மோகனுார் அருகே 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் வினோத நிகழ்வு

மோகனுார் அருகே 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் வினோத நிகழ்வு


ADDED : ஜன 17, 2025 06:12 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: தொட்டியநாயக்கர் சமூகத்தினரால், ஐந்து தலைமுறைகளாக நடத்தப்படும் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் ரசித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வாழவந்திநாடு, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர். அவர்கள், ஐந்து தலைமுறைகளாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காப்பு கட்டிய மறுநாள் முதல், ஊர் ஊராக சென்று, நன்கொடை வசூல் செய்கின்றனர்.

தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள் துாள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர். கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை, பூ தாண்டும் விழாவாக, அந்த சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழா, மோகனுார் அடுத்த கொமரிபாளையம் ஊராட்சி, ஊனாங்கல்பட்டி, பரளி ஊராட்சி ஒத்தையூர், நல்லையம்பட்டி, என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டி, லத்துவாடி ஊராட்சி தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி ஊராட்சி மேலப்பட்டி, திண்டமங்கலம் ஊராட்சி வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.

ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர் மற்றும் தொட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் நடத்திய மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி, ஊனாங்கல்பட்டியில் நடந்தது. ஆறு சுவாமி மாடுகள் பங்கேற்றன. மூன்று முறை போட்டி நடந்தது. மேலப்பட்டியை சேர்ந்த மாடு வெற்றி பெற்றது. தொடர்ந்து அவ்வூர் கோமாளியை, குதிரை மீது அமர வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியை ரசித்தனர்.






      Dinamalar
      Follow us