ADDED : செப் 15, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: புதுச்சத்திரம், காரைக்குறிச்சி புதுாரை சேர்ந்த ராமசாமி மகன் பாலசுப்பிரமணியம், 52; டேங்கர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றார்.
அப்போது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாறு-மாறாக லாரியை ஓட்டிச்சென்றார். இதைக்கண்ட மக்கள் அலறிய-டித்தபடி ஓட்டமெடுத்தனர். வெண்ணந்துார் அருகே, கீரனுார் செக்போஸ்டில் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.மேலும், குடிபோதையில் இருந்த டிரைவர் பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.